Sunday 4 October 2015

என்ன வகையான தமிழ்த்தேசத்தை இவர்கள் அமைக்கப்போகிறார்கள்?

என்ன வகையான தமிழ்த்தேசத்தை இவர்கள் அமைக்கப்போகிறார்கள்?


தமிழர்கள் மானமும் அறிவும் பெற்ற, சுயமரியாதையுள்ள மனிதர் களாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்னாளெல்லாம் சிந்தித்த, செயல்பட்ட தந்தை பெரியாரின், திர்ரவிட இயக்கத்தின் ஓர் முக்கியச் சொல்லாடல்; பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்த்தி வந்தால் புத்தி போய்விடும். என்பதாகும்.
          ஆனால் பெரியார் எதிர்ப்பு, திராவிட இயக்க எதிர்ப்பு ஓர் மனிதர்க்கு வந்து விட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு  தமிழக அரசியல் வரலாற்றில் சீமான் மட்டுமல்ல அவரால் தமிழ்த் தேசியத்தின் தந்தை, தாத்தா, பாட்டன் என்று தம் முன்னோடிகளாகப் போற்றப்படும் பலரும் அய்யாவை எதிர்த்து இந்து மதத்தின், பார்ப்பனியத்தின் காலடியில் சரணடந்ததே கடந்த கால வரலாறு ஆகும்.
           சுருக்கம் கருதி ஒரே ஒரு சான்று மட்டும். சீமான் தனது நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் மண்ணுரிமை வழிகாட்டி என்று அடைமொழி கொடுத்து போற்றும் ம.பொ.சிவஞானம் தனது இலக்கியங்களில் இனவுணர்ச்சி என்ற நூலில் (பக்கம்22) கூறியுள்ளது:

     திருவள்ளுவர், தமிழ் நாட்டிலேதான்~தமிழர் குடும்பத்தில் தான் பிறந்தார். தமிழிலேதான் திருக்குறளை இயற்றியிருக்கிறார். ............
ஆன்மாவுக்கு எழுமை எழுபிறப்பு உண்டு என்ற கருத்தும், மேலுலகம் உண்டென்ற நம்பிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. பாவ புண்ணியங்களும், நரகம், சொர்க்கம் ஆகியவற்றைச்சொல்லவும் வள்ளுவர் மறந்துவிடவில்லை.
    இவையனைத்தும் இந்தியாவின் பூர்வகுடி மக்களான இந்துக்களின் நம்பிக்கைகள் என்பதனை மறுக்கமுடியுமா? மதப்பற்றுடன் இவ்வள வையும் கூறும் வள்ளுவருக்கு, இந்திய தேசப்பற்று இருந்திருக்கு மென்று நம்பலாந்தானே?
           
        அடக்கொடுமையே! இறுதியில் இந்த மண்ணுரிமை( இந்திய மண்ணா? தமிழ்மண்ணா?) வழிகாட்டி திருக்குறளை இந்த்துத்துவ இலக்கிய மாகவும், திருவள்ளுவரை ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவும் ஆக்கிவிட்டாரே. தாத்தா ம.பொ.சி சங்க இலக்கியத்தில் இன வுணர்ச்சியைத் தேடினாரென்றால் இன்று நாம் தமிழர் பேரப்பிள் ளைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று முப்பாட்டன் முருகனிடம் இனவிடுதலைக்கு வழி கேட்கிறார்கள். இதுதான் இவர்களது பார்ப் பனிய தமிழ்த்தேசியத்தின் பரிணாம வளர்ச்சி.
        அடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் போதும் சீமான், அப்பகுதியில் பெரும்பலத்துடன் வாழும் ஆதிக்க சாதியினரை போற்றிப் புகழ்ந்து உசுப்பேற்றுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். காரைக்குடி ஜல்லிக் கட்டு ஆதரவு மானாட்டில் வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றியதோடு வேலு நாச்சியாரை தனது அப்பத்தா என்றார்.( சிவாஜி, பாரதி ராஜா, மணிவண்ணன் போன்றோர் அப்பாக்கள் என்றால் வேலுனாச்சி அப்பத்தா என்பது சரியான உறவு முறைதான்)
      இவ்வாறு செய்வதன் மூலம் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழக ஆதிக்க சாதியினர் அனைவரது வாக்கு
களையும் பொறுக்கத் திட்டமிடுகிறார். இதன் ஓர் அங்கம் தான் பிரன்மலைக்கள்ளர்  மான்னாட்டு பங்கேற்புங்கூட. ஆனால் தேர்தலில் பங்கேற்காத தியாகுவுக்கு இம்மா நாட்டில் என்ன வேலை? விட்டகுறை, தொட்ட குறையா?    ஆனால் ஒன்று மட்டும் நமக்குப் புரியவில்லை, இந்த (தமிழ்ச்) சாதிகளை யெல்லாம் (உசுப்பேத்தி) ஒன்றுகூட்டி என்ன வகையான தமிழ்த்தேசத்தை இவர்கள் அமைக்கப்போகிறார்கள்?

No comments:

Post a Comment